“ஜனநாயகத்துக்கான மரண அடி”: மாகாண சபைகளை நடத்தும் விதம் தொடர்பில் மஹிந்த தேசபிரிய கருத்து

🕔 November 10, 2023

ள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பதில் – எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என, அந்தக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மக்கள் பிரதிநிதிகளை நியமிக்காமல், அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் மாகாண சபைகளை தொடர்ந்தும் நடத்துவது நாட்டின் ஜனநாயகத்துக்கான மரண அடி என்றும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மஹிந்த தேசப்பிரிய இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை, அரசியலமைப்பில் திருத்தம் செய்தால் தவிர, வேறு எந்த வகையிலும் பிற்போடுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டினார்.

“ஜனாதிபதித் தேர்தலை விரைவில் நடத்த முடியாது. தாமதிக்கவும் முடியாது. 2024 செப்டம்பர் 17 க்கும், ஒக்டோபர் 17 க்கும் இடையில் நடாத்தியே ஆக வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்