சீனிக்கான வரி அதிகரிப்பை, முன்னராகவே சில வர்த்தகர்கள் எவ்வாறு அறிந்து கொண்டனர்: அமைச்சர் மனுஷ கேள்வி
சீனிக்கான விஷேட பண்டங்கள் வரியில் மாற்றம் செய்யப்படுவதற்கான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்படுவதற்கு முன்னரே, அது தொடர்பில் குறிப்பிட்ட சில வர்த்தகர்கள் எவ்வாறு அறிந்திருந்தனர் என, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயகார கேள்வி எழுப்பியுள்ளார்.
ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர், வரி உயர்வு யார் அறிந்திருந்தனர்? யாரேனும் இந்த தகவலை கசிய விட்டார்களா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
சீனிக்கான ஆகக்கூடிய சில்லறை விலையை விதித்ததன் மூலம், அநியாயமான லாபத்தை பெற சிலர் மேற்கொண்ட முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.