சிறைப்பிடிக்கப்பட்டோர் விடுவிக்கப்படும் வரை, காஸாவுக்கு மின்சாரம், எரிபொருள், மனிதாபிமான உதவிகள் இல்லை: இஸ்ரேல் அறிவிப்பு

🕔 October 12, 2023

மாஸ் போராளிகளால் சிறைபிடிக்கப்பட்ட அனைவரும் விடுவிக்கப்படும் வரை காஸாவுக்கு மின்சாரம், எரிபொருள் மற்றும் மனிதாபிமான உதவி எதுவும் வழங்கப்பட மாட்டாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் கடுமையான குண்டுவீச்சு மற்றும் ‘முழு முற்றுகைக்கு’ மத்தியில், சுகாதார கட்டமைப்பு சரிவடையத் தொடங்கியுள்ளதாக காசாவில் உள்ள அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதேவேளை, அவசரகால தேசிய அரசாங்கத்தை அமைப்பதாக அறிவிப்பு விடுக்கப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, இஸ்ரேலில் உள்ள சிரேஷ்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேலில் தங்கியுள்ளார்.

காசாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை இப்போது 1,350 க்கும் அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் இஸ்ரேலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,300 ஐ எட்டியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்