மொட்டுடன் கை கோர்க்கும் திட்டமில்லை: மைத்திரி
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கைகோர்க்கும் திட்டம் எதுவும் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிறிசேன;
இருந்தபோதிலும் எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு – தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்து, மாவட்ட மட்டத்தில் தனது பணிகளை விரிவுபடுத்துவதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நோக்கமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.