மைத்திரிக்கு எதிரான இடைக்காலத் தடையை இல்லாமல் செய்ய நீதிமன்றம் தீர்மானம்

🕔 September 26, 2023

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை இல்லாமல் செய்ய – கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (26) தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு அனுப்பப்பட்ட விளக்கக் கடிதத்தை செயற்படுத்துவதைத் தடுக்கும் வகையில் நீதிமன்றம் இதற்கு முன்னர் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த வழக்கில் உண்மைகளை மறைத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – தனது சட்டத்தரணி பைசர் முஸ்தபாவின் ஊடாக தெரிவித்துள்ளதோடு, இந்த தடை உத்தரவை கலைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

உண்மைகளை கருத்திற்கொண்ட கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சந்துன் விதான, மேற்படி தடை உத்தரவை இல்லாமல் செய்யத் தீர்மானித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்