சீரற்ற காலநிலையினால் விவசாயம் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு: விவசாய அமைச்சர் உறுதி

🕔 September 10, 2023

சீரற்ற காலநிலையினால் அண்மையில் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர உறுதியளித்துள்ளார்.

பெய்த மழையினால் அறுவடைக்கு தயாராக இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் அழிவடைந்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர்; கடுமையான வறட்சி மற்றும் அதைத் தொடர்ந்து பெய்த பெரும்மழை ஆகியவற்றினால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குமாறு விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அதன்படி, இழப்பீடு தேவைப்படும் விவசாயிகளின் எண்ணிக்கை தொடர்பான அனைத்து தகவல்களையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தற்போது திரட்டி வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்