சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தயாசிறி ஜயசேகர நீக்கம்: கட்சி உறுப்புரிமையிலிருந்தும் இடைநிறுத்தம்

🕔 September 6, 2023

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமுன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், எனவே அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக செயற்பட முடியாது எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளமை தொடர்பில் – அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கி, கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்தியுள்ளமை தொடர்பான கடிதம் கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக அக்கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்