வங்கிக் கணக்குகளை ஊடுருவி பண மோசடியில் ஈடுபட்ட உக்ரேனிய கணவருக்கு விளக்க மறியல், மனைவிக்கு பிணை: கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவு

🕔 August 18, 2023

னியார் வங்கியொன்றின் மூன்று கணக்குகளை ஊடுருவி சுமார் 13.7 மில்லியன் ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட உக்ரேன் பெண்ணுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

சந்தேக நபருக்கு கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய நேற்று (17) பிணை வழங்கியுள்ளதாக டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.

கொள்ளைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான உக்ரைன் பெண்ணின் கணவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் அனுமதியின்றி வங்கிக் கணக்குகளை பிரவேசித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) நீதிமன்றில் அறிவித்தது.

கணக்குகளிலிருந்து பணத்தை எடுத்த சந்தேகநபர் – பின்னர் இரண்டு தடவை – உக்ரேனிய பெண்ணுக்கு சொந்தமான பிரமிட் மோசடி கணக்குகளில்அந்தப் பணத்தை இரண்டு தடவை வைப்புச் செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

உக்ரேனிய பெண்ணுக்கு நாட்டை விட்டுச் செல்வதற்கு தடை விதித்த நீதவான், தலா ஒரு கோடி ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்குமாறும் உத்தரவிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்