தமது நிரப்பு நிலையங்களில் குறைந்த விலைகளில் எரிபொருள் விற்பதற்கு சினொபெக் அனுமதி கோரல்
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலையை விடவும் குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு, சினோபெக் எரிபொருள் நிரப்பு நிலைய நிறுவனம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் அனுமதி கோரியுள்ளது.
அதன்படி, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலையை விடவும் ஒவ்வொரு ரக எரிபொருளுக்கும் லீற்றருக்கு 3 ரூபாய் குறைவாக விற்பனை செய்வதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதற்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்னும் பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
சினொபெக் நிறுவனத்துக்கு 130 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 20 நிலையங்களை வழங்கவும் அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.
இதேவேளை சினொபெக் நிறுவனம் – எரிபொருள் நிரப்பு நிலையங்களை இலங்கையில் தொடங்க இன்னும் இரண்டு வாரங்கள் ஆகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.