எம்ஒபி உரத்தை இலவசமாக வழங்க தீர்மானம்

🕔 August 5, 2023

னைத்து விவசாயிகளுக்கும் அடுத்த பெரும் போகத்தில் எம்ஒபி (MOP) உரம் இலவசமாக வழங்க முடிவு செய்யப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதுதவிர, மற்றொரு ரக உரத்தின் விலையை குறைக்கவும், உர விநியோகத்தில் இருந்து அரசாங்கம் விலகி, உரத்தினை கொள்வனவு செய்வதற்கு தேவையான பணத்தை விவசாயிகளின் வங்கி கணக்கில் வைப்பிலிடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டிடுள்ளார்.

கடந்த மாதம் எம்ஒபி உரத்தின் விலையை அரசாங்கம் குறைத்திருந்தது. இதன்படி 50 கிலோகிராம் உரமூட்டையொன்றுக்கு 1000 ரூபாய் விலை குறைக்கப்பட்டது. இதன்படி ஒரு மூட்டை எம்ஒபி உரத்தின் விலை 14 ஆயிரம் ரூபாயாக அமைந்தது.

நாட்டில் தற்போது 1.2 மில்லியன் நெல் விவசாயிகள் உள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்