பணத்தூய்மையாக்கல் வழக்கிலிருந்து விடுவிக்குமாறு, நாமல் உள்ளிட்ட 06 பேர் மனுத்தாக்கல்

🕔 July 24, 2023

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட் 06 பேர் – பணத்தூய்மையாக்க வழக்கிலிருந்து தங்களை விடுவிக்குமாறு கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 200 (1) பிரிவின் பிரகாரம், மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக குற்றச் சாட்டுக்கான ஆணைக்குழுவை நிறுவுவதற்கு அரசாங்கத் தரப்பு தலைமையிலான சாட்சியங்கள் முற்றாகத் தவறியதைக் கருத்தில் கொண்டு, குற்றம் சாட்டப்பட்டவர் சார்பாக, விடுதலை தீர்ப்பை பதிவு செய்யுமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள்து.

இந்த வழக்கு எதிர்வரும் செப்டம்பர் 13ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு திகதியிடப்பட்டுள்ளது.

கோவர்ஸ் கார்ப்பரேட் சர்வீசஸ் (பிரைவேட்) லிமிடெட் மூலம் 30 மில்லியன் ரூபாய் பணத்தை தூய்மையாக்கியதாக நாமல் உள்ளிட்ட 06 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்