இலங்கையிலுள்ள நோர்வே தூதரகம் இம்மாத இறுதியில் மூடப்படுகிறது
இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் 2023 ஜூலை 31 முதல் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் புதுடில்லியில் உள்ள நோர்வே தூதரகம் – இலங்கை மற்றும் மாலைதீவுகளுடனான இருதரப்பு உறவுகளை கையாளும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பரில், நோர்வே அரசு, வெளிநாட்டில் உள்ள தூதரகப் பணிகளின் வலையமைப்பில் சில கட்டமைப்பு மாற்றங்கள் காரணமாக, 2023 ஜூலை இறுதிக்குள் கொழும்பில் உள்ள நோர்வே தூதரகத்தை நிரந்தரமாக மூட முடிவு செய்துள்ளதாக அறிவித்தது.
அதன்படி, நோர்வே அரசாங்கம் 2023 சில நாடுகளிலுள்ள தமது தூதரகங்களை மூடுவதாக அறிவித்துள்ளது.