சூரிய சக்தி மின்சார உற்பத்தியாளர்களுக்கான கொடுப்பனவுகளை செலுத்தியுள்ளதாக அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு

சூரிய சக்தியிலிருந்து மின்சார உற்பத்தியாளர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட மின்சாரத்துக்கு ஏப்ரல் 30ஆம் திகதி வரைசெலுத்த வேண்டிய அனைத்து கொடுப்பனவு பாக்கிகளையும் செலுத்தியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதனை மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த 12 மாதங்களாக சூரிய சக்தியிலிருந்து மின்சார உற்பத்தியாளர்களிடமிருந்து, இலங்கை மின்சார சபை பெற்றுக் கொண்ட மின்சாரத்துக்கு செலுத்த வேண்டிய தொகை 04 பில்லியன் ரூபாய் நிலுவையில் இருந்தது.
மின்சார வழங்குநர்களுக்கான அனைத்துக் கட்டண நிலுவைகளையும் மின்சார சபை தொடர்ந்து செலுத்தும் என்றும், மாதாந்த கொடுப்பனவு திட்டத்தில் – அடுத்த ஆறு மாதங்களுக்குள் அவற்றை முழுமையாகத் தீர்க்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.