கடத்தலில் ஈடுபட்ட அலி சப்ரி ரஹீமுக்கு குறைந்த தொகை அபராதம்; பின்னணியில் யார்: தகவல்களை வெளிப்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர்

🕔 June 6, 2023

விமான நிலையத்தில் தங்கம் மற்றும் கைத்தொலைபேசி ஆகியவற்றுடன் பிடிபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு குறைந்தளவு தண்டப்பணம் விதிக்கப்பட்டதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜீத் பிரேமதாஸ இன்று (06) நாடாளுமன்றில் தெரிவித்தார்.

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்களுக்கான நடத்தை விதிகளை பின்பற்றுவதற்கு கடமைப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் பல சரத்துக்கள் உள்ள போதிலும் அண்மையில் விமான நிலையத்தில் சட்டவிரோத தங்கம் மற்றும் பொருட்களுடன் பிடிபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு – ஏன் சட்டம் உரிய முறையில் பிரயோகிக்கப்படவில்லை எனவுவும் சஜீத் பிரேமதாஜ இதன்போது கேள்வியெழுப்பினார்.

80 மில்லியன் ரூபாபா பெறுமதியுடைய 4.611 கிலோ தங்கத்தை கொண்டு வந்த நபர் ஒருவருக்கு 70 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதாகவும், அதனை செலுத்த முடியாததால் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாகவும் தனது உரையில் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர்; 740 லட்சம் ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு வந்த போது – பிடிபட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு 7.5 மில்லியன் ரூபா மட்டுமே அபராதமாக விதிக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் அனைவரையும் அவமானப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட அந்தச் செயலை வன்மையாகக் கண்டிப்பதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அலி சப்ரி ரஹீம் ராஜினாமா செய்யுமாறு கோரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நாட்டின் குடிமகனுக்கு ஒரு கவனிப்பும், நாடாளுமன்ற உறுப்பினருக்கு மற்றொரு கவனிப்பும் நடைமுறைப்படுத்துவது ‘முறை மாற்றமா’ (Systerm Change) என கேள்வி எழுப்பிய இதற்குப் பின்னால் இருக்கும் மறை கரம் எது? என கேள்வி எழுப்புவதாகவும், இது தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்