டயானா கமகேயின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்துச் செய்யக் கோரும் வழக்குத் தீர்ப்பு தொடர்பில் நீதிமன்றம் அறிவிப்பு

🕔 June 6, 2023

ராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்யுமாறு உத்தரவினை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை மாதம் 25ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (06) மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே தீர்ப்பை ஒத்தி வைத்து நீதிமன்றம் அறிவித்தது.

குறித்த வழக்கின் தீர்ப்பு இன்றைய தினம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி நிஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ.மரிக்கார் ஆகிய நீதிபதிகள், தீர்ப்பை பிற்போடுவதாக அறிவித்தனர்.

சமூக செயற்பாட்டாளரான ஒசத ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

ராஜாங்க அமைச்சர் டயானா கமகே பிரித்தானிய குடியுரிமையை கொண்டுள்ளதால், அவருக்கு இந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கத் தகுதி இல்லை என்ற தீர்ப்பினை வழங்குமாறு கோரி அவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்