‘கிவ்ஆர்’ முறையிலான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன அறிவிப்பு

🕔 May 26, 2023

கிவ்ஆர் (QR) முறையின் கீழ் தற்போது வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு – அடுத்த மாத எரிபொருள் விலை திருத்தத்திலிருந்து அதிகரிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (26) அறிவித்தார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிதி, வர்த்தக மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவுகளுடன் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் விஜேசேகர ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இச்சந்திப்பின் போது பெற்றோலியக் கூட்டுத்தாபன சரக்கு திட்டம், நிதி மற்றும் விநியோக திட்டங்கள் குறித்தும் மீளாய்வு செய்யப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போது கார்கள், விசேட தேவைக்கான வாகனங்கள் உள்ளிட்டவற்றுக்கு 30 லீற்றரும், முச்சக்கர வண்டிகளுக்கு 08 லீற்றரும், மோட்டார் சைக்கிள்களுக்கு 07 லீற்றரும், பேருந்துகளுக்கு 60 லீற்றரும் எரிபொருள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்