விஷேட தேவையுடையோருக்கு கல்முனையில் ஆளுமை விருத்தி பயிற்சி

🕔 May 17, 2023

– பாறுக் ஷிஹான் –

விசேட தேவையுடையோருக்கான ஆளுமை விருத்தி பயிற்சி நெறி நிகழ்வு  இன்று (17) கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

சுயதொழில் ஊக்குவித்தல் மற்றும் தனியார் துறையில் வேலைக்கு அமர்த்தல் தொடர்பான அனுபவ பகிர்வு உள்ளிட்டவைகள் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

பிரதேச செயலாளர் ஜெ.லியாகத் அலி வழிகாட்டலில் நடைபெற்ற இந் நிகழ்வில் கல்முனை பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம். ஜவ்பர் தலைமையில் மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். ஜீவரூபன், திறனாய்வு உத்தியோகத்தர்  எம்.வை.எம். றிபாது ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

வளவாளர்களாக மனித வலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் திருக்கோவில் பிரதேச செயலக மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.கங்காதரன்  மற்றும் றியாஸ்தீன், அம்பாறை மாவட்ட தொழில் நிலையத்தின் கடமை புரிகின்ற புவிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கல்முனை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட விசேட தேவையுடைய பயனாளிகள் கலந்து இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்