அரச ஊழியர்களின் சம்பளத்தை இவ்வருட இறுதி காலாண்டுக்குள் அதிகரிக்க திட்டம்

🕔 May 7, 2023

ரச ஊழியர்களின் சம்பளத்தை இவ்வருட இறுதி காலாண்டுக்குள் அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அரசாங்கம் எதிர்பார்த்த இலக்குகளை எட்டினால், அதன் பலன்களை பொதுமக்கள் பெறுவார்கள் என்றார்.

“நாங்கள் இப்போது வங்குரோத்து நிலையிலிருந்து வெளியே வந்துள்ளோம். இதனால், மக்கள் பயனடைந்துள்ளனர்” எனவும் அவர் கூறினார்.

“நாட்டின் பொருளாதாரம் புனரமைக்கப்பட்டதன் பின்னர், வருடத்தின் இறுதி காலாண்டுக்குள் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வை வழங்கலாமென தான் நம்புவதாக ஜனாதிபதி தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார.

“இதனால்தான் அரசாங்கம் பணம் வசூலிக்கவும், வருமானத்தை அதிகரிக்கவும் முயற்சிக்கிறது. அரசு எதிர்பார்த்த இலக்கை எட்டினால், அரசு ஊழியர்களும் பயனடைவார்கள்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்..

Comments

புதிது பேஸ்புக் பக்கம்