அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு, தொடர்ச்சியாக வழங்கப்படும்: அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு

🕔 April 25, 2023

திகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு மறு அறிவித்தல் வரையில் மாற்றம் இல்லாமல் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்குமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு – எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டதுடன், பின்னர் மேலும் ஒரு வாரத்துக்கு அது நீடிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஒதுக்கீட்டு அதிகரிப்பை – மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது, முச்சக்கர வண்டிகளுக்கு 05 லீற்றரில் இருந்து 08 லீற்றராகவும், மோட்டார் சைக்கிளுக்கு 04 லீற்றரில் இருந்து 07 லீற்றராகவும், பஸ்களுக்கு 40 லீற்றரிலிருந்து 60 லீற்றராகவும், கார்களுக்கு 20 லீற்றரிலிருந்து 30 லீற்றராகவும் எரிபொருள் அதிகரிக்கப்பட்டிருந்தது.

தொடர்பான செய்தி: எரிபொருள் ஒதுக்கீடு நள்ளிரவு முதல் அதிகரிப்பு: மோட்டார் சைக்கிள்களுக்கு 07 லீட்டர் வரை வழங்கப்படும்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்