ஜனாதிபதி ரணில் சிறப்பாகச் செயற்படுகிறார்: பௌசி எம்.பி புகழாரம்

🕔 April 7, 2023

னாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறப்பாக செயற்படுகின்றார் என்றும், அவர் பொது மக்களால் அதற்கு சான்றளிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி இன்று தெரிவித்தார்.

“ஜனாதிபதி சிறப்பாகச் செயற்படுகிறார் என்பது தெளிவாகக் காணப்படுகிறது. இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல, ரணில் விக்கிரமசிங்கவைப் பற்றி மக்கள் கூறுவதும் இதுவேயாகும்” எனவும் அவர் கூறினார்.

இதேவேளை அவர் அரசாங்கத்தின் பக்கம் தாவவுள்ளதாக வரும் செய்திகளை நிராகரித்தார். “நான் யதார்த்தத்தை மட்டுமே பேசினேன்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

ராஜித சேனாரத்ன உள்ளிட்ட சில நடாளுமன்ற உறுப்பினர்களும் நேற்று இதேபோன்ற கருத்துக்களை வெளியிட்டிருந்த நிலையில், ஜனாதிபதிக்கு சாதகமாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பௌசியும் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்