ரணில்தான் அடுத்த ஜனாதிபதியாக வரவேண்டும் என அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு: அப்படியொரு தீர்மானம் இல்லை என்கிறார் பந்துல

🕔 April 4, 2023

ணில் விக்ரமசிங்கவே அடுத்த ஜனாதிபதியாக வரவேண்டும் என்று, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் கருதுவதாக, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பல்வேறு கட்சி உறுப்பினர்கள் மத்தியில் கலந்துரையாடப்பட்டதாக, நிகழ்ச்சியொன்றின் போது அமைச்சர் குறிப்பிட்டார்.

அடுத்து என்ன தேர்தல் நடத்துவது என்பது உறுதியாகத் தெரியவில்லை என கூறிய அமைச்சர், தேர்தல் நேரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொருத்தமான தீர்மானத்தை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவை முன்னிறுத்துவது தொடர்பில் இதுவரையில் எந்தவொரு யோசனையும் முன்வைக்கப்படவில்லை என, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குவான்வர்தன இன்று (04) ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது அண்மைக்கால செயற்பாடுகள் மூலம் நாட்டின் மறுமலர்ச்சியை முன்னெடுப்பதற்கு மிகவும் பொருத்தமான நபராக மக்கள் மத்தியில் வெற்றிபெற்றுள்ளார் என அவர் குறிப்பிட்டார்.

தற்போது பொது மக்களினதும், பொதுஜன பெரமுன கட்சியினதும் முன்னுரிமை, தேசத்துக்கு புத்துயிர் கொடுத்து – அபிவிருத்தி செய்வதாகும் என்றும் அவர் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்