பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ‘ஐஸ்’ விற்று வந்தவர் பாண்டிருப்பில் கைது
– பாறுக் ஷிஹான் –
ஐஸ் போதைப்பொருளை செய்த சந்தேக நபர் ஒருவரை, கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் – பாண்டிருப்பு பகுதியில் அமைந்துள்ள வாகன புகை பரிசோதனை நிலையத்துக்குமுன்னால், சந்தேகத்துக்கிடமாக நடமாடிய இளைஞன் குறித்து, கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றிருந்தது.
இதற்கமைய நேற்று (25) மாலை சம்பவ இடத்துக்குச் சென்ற கல்முனை விசேட அதிரடிப்படையினர், பெரிய நீலாவணை பகுதியை சேர்ந்த 35 வயதான சந்தேக நபரை கைது செய்ததுடன் சந்தேக நபரின் உடமையில் இருந்து 1 கிராம் 80 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளை கைப்பற்றினர்.
சந்தேக நபர் – பாடசாலை மாணவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நீண்ட காலமாக, ஐஸ் வியாபாரத்தை தொலைபேசியின் ஊடாக தொடர்பு கொண்டு முன்னெடுத்து வந்துள்ளமை விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
பின்னர் கைது செய்யப்பட்ட நபர் உள்ளிட்டவரையும், சான்று பொருளையும் – பெரிய நீலாவணை பொலிஸாரிடம் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தினர்