வாக்குச் சீட்டுக்களை தொடர்ந்தும் அச்சிட முடியாது: தேர்தல் ஆணைக்குழுவுக்கு அச்சக அதிகாரி அறிவிப்பு

🕔 February 13, 2023

ள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்களை தொடர்ந்தும் அச்சிட முடியாது என – அரச அச்சக அதிகாரி கங்கானி லியனகே தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதற்கான பணம் கிடைக்கும் வரை வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதனை நிறுத்தி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் வாக்குச் சீட்டுகளை அச்சடிப்பதன் பின்னணியில் பாரிய சதி இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் ஊடகமொன்றுக்கு கூறியுள்ளார்.

தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளில் ஒரு பகுதியை அச்சிட்டு தேர்தல் ஆணையகத்துக்கு கொண்டு செல்லுமாறு பணிப்புரை விடுத்த அரச அச்சக அதிகாரி, திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தலுக்கான வாய்ப்பைப் பறிக்கும் பின்னணியை உருவாக்கியுள்ளார் என குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்