ரணில் இரண்டு முக்கிய விடயங்களை நிறைவேற்றியுள்ளார்: பசில் புகழாரம்

🕔 February 7, 2023

ளும் பொதுஜன பெரமுன கட்சியினால் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க – இரண்டு முக்கிய விடயங்களை நிறைவேற்றியுள்ளார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பொதுஜன பெரமுனவரின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹிரு தொலைக்காட்சியின் அரசியல் நிகழ்ச்சியொன்றில் நேற்றைய தினம் கலந்து கொண்டு பேசும் போது அவர் இதனைக் கூறினார். நாட்டில் சுதந்திரத்துடன் அரசியலில் ஈடுபடுவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அமைதியான சூழலை ரணில் விக்கிரமசிங்க ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

“அரகலய எனும் போராட்டம் காரணமாக, நாங்கள் எங்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. அரசியல்வாதிகளின் பல சொத்துக்கள் பொதுமக்களால் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டன. ஆனால் ரணில் விக்கிரமசிங்க அந்த நிலையை முதலில் மாற்றியமைத்தார்” என்றும் அவர் கூறினார்.

“இரண்டாவதாக எரிவாயு சிலிண்டர் வெடிப்பு, எரிபொருள் வரிசைகள் மற்றும் 10 மணிநேர மின்வெட்டு போன்ற முக்கிய பிரச்சினைகளையும் அவரால் தீர்க்க முடிந்தது” எனவும் பசில் குறிப்பிட்டார்.

“தற்போது, அந்த சமூகப் பிரச்சனைகள் எதையும் நாங்கள் எதிர்கொள்ளவில்லை. அவர் அத்தகைய பிரச்சினைகளை தீர்க்கும் திறன் கொண்ட ஒரு தனி நபர் என்று நாங்கள் நம்பினோம், அவர் அதை நிரூபித்துள்ளார்” என்று அவர் கூறினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் – ஜனாதிபதிக்கான தெரிவு சரியானது என்பதையே இது காட்டுகிறது எனறும் பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்