அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக மைத்திரி அறிவிப்பு

🕔 January 31, 2023

டுத்த ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை சுதந்திரக் கட்சியின் ஆதரவுடன் போட்டியிடப் போவதாக, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன இன்று (31) தெரிவித்தார்.

சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்டு ஜனாதிபதித் தேர்தலில் வெல்ல முடியும் என்று தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தனக்கு எதிரான எந்தவொரு சதித்திட்டத்துக்கும் பயப்படப் போவதில்லை என்றும், எதற்கும் பின்வாங்கும் மனிதர் தான் அல்ல எனவும் இதன் போது மைத்திரி மேலும் கூறினார்.

“நான் எதற்கும் பின்வாங்க மாட்டேன், எந்தவொரு சதித்திட்டத்திற்கும் நான் பயப்படவில்லை. நான் சட்டத்தையும் நீதிமன்றத்தையும் மதிக்கிறேன். அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு சுதந்திரக் கட்சி ஆதரவுடன் என்ன கஷ்டங்கள் வந்தாலும் நான் போட்டியிடுவேன்” என்றும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்