ராஜாங்க அமைச்சரின் வாகனம் மோதி விபத்துக்குள்ளானவர், சிகிச்சை பலனின்றி மரணம்

ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வாகனம் மோதி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் – சிகிச்சை பலனின்றி நேற்று (31) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஒக்டோபர் 15ஆம் திகதி, புத்தளம் பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தின் பின்னர் பாதிக்கப்பட்ட நபர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த வாகனத்தில் பயணித்த போது, ஏற்பட்ட விபத்தில் – மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்தார்.
இதனையடுத்து சனத் நிஷாந்தவின் சாரதி கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் உடல் இன்று காலை மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டது.