சீனி, அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களுக்கான விலைகள் 40 வீதம் வரை அதிகரிப்பு

🕔 March 24, 2022

றக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை 30 முதல் 40 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

சீனி, பருப்பு, அரிசி ஆகியனவற்றின் விலைகள் இவ்வாறு அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து கடனுதவி கிடைத்த பின்னர், தற்போதுள்ள டொலருக்கான கேள்வி குறைவடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்