சைக்கிளில் வேலைக்கு வரும் அரச ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கத் திட்டம்: அமைச்சர் அமரவீர அறிவிப்பு

🕔 January 26, 2022

ளி மாசுபடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக, சைக்கிள்களின் பாவனையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சைக்கிள்களின் பாவனையை மேம்படுத்துவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அமரவீர கூறியுள்ளார்.

சுற்றாடல் அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களில் பணிபுரியும் அரச ஊழியர்கள் சைக்கிள்களைப் பயன்படுத்தி பணிக்கு செல்லும் போது, அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரதான வீதிகளில் சைக்கிள் பாதையினை ஒதுக்குவது குறித்தும் பரிசீலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் போது அல்லது போக்குவரத்து நெரிசலில் பயணிக்கும் ஒவ்வொரு வாகனத்துக்கும், ஒரு கிலோமீற்றருக்கு 103 ரூபா 50 சதத்தை அரசு செலவு செய்வதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பின்னரே உண்மைகள் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்