வீதி விபத்துக்களில் இவ்வருடம் பலியானோர்; எண்ணிக்கையை வெளிப்படுத்தினார் அமைச்சர் சரத் வீரசேகர

🕔 November 14, 2021

நாட்டில் இந்த வருடத்தில் இதுவரை 1940 பேர், வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அம்மிரல் சரத் வீரசேகர இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

கடந்த 10 வருடங்களில் வீதி விபத்துக்களில் 27,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பில் நாடாளுமன்றில் நடைறெ்ற அமைச்சர்கள் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்