மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று ஆரம்பம்

🕔 November 1, 2021

நாட்டில் இன்று (01) தொடக்கம் கொவிட் மூன்றாவது தடுப்பூசியை (பூஸ்டர்) செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பமாவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன், முதற்கட்டமாகச் சுகாதார தரப்பினர் உள்ளிட்ட முன்வரிசை சேவையாளர்களுக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.

அவர்களில் இரண்டாவது கட்டமாகப் பாதுகாப்பு தரப்பினருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.

ஃபைசர் ஊசிகளே இவ்வாறு பூஸ்டர் தடுப்பூசியாகச் செலுத்தப்படவுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்