சிரேஷ்ட பெண் பொலிஸ் அத்தியட்சகர்கள் மூவர், ஒரே தடவையில் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக தரமுயர்வு: வரலாற்றில் முதல் தடவை

🕔 October 7, 2021

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிரேஷ்ட பெண் பொலிஸ் அத்தியட்சகர்கள் மூவர் (எஸ்எஸ்பி) பிரதி பொலிஸ் மா அதிபர்களாக (டிஐஜி) பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களான ரேணுகா ஜெயசுந்தர, நிசாந்தி செனவிரத்ன மற்றும் பத்மினி வீரசூரிய ஆகியோர் இவ்வாறு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

உடன் அமுலுக்கு வரும் வகையில் இவர்கள் பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் தற்போது மொத்தமாக நான்கு பெண்கள் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக பதவி வகிக்கின்றனர்.

ஏற்கனவே பிம்சானி ஜசிங்கஆராச்சி – பிரதிப் பொலிஸ் மா அதிபராக உள்ளார். இலங்கை பொலிஸ் வரலாற்றில் பிரதி பொலிஸ் மா அதிபராக தரமுயர்த்தப்பட்ட முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்