பேராதனைப் பல்கலைக்கழக பதிவாளர் உள்ளிட்ட மூவர் வேலை நீக்கம்

🕔 October 4, 2021

பேராதனைப் பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் இரண்டு சிரேஷ்ட அதிகாரிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் வேலையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக நிர்வாகம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

இவ்வாறு வேலை நீக்கம் செய்யப்பட்ட ஏனைய இருவரில் ஒருவர் பொறியியலாளர், மற்றையவர் அத்தியட்சகராவார்.

முன் அனுமதியின்றி கடமை நேரத்தில் பதிவாளரின் வீட்டை பழுதுபார்ப்பதற்காக பல்கலைக்கழகத்தின் ஊழியர்கள் மற்றும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை மேற்படி மூவரும் தவறாகப் பயன்படுத்தியதாக பல்கலைக்கழக நிர்வாகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சமீபத்தில் நியமனம் பெற்றவர்கள் எனத் தெரிவித்த பேச்சாளர்; அவர்கள் நன்னடத்தை காலத்தில் இருப்பதாகவும் கூறினார்.

பதிவாளரின் வீட்டில் வேலை நடக்கும் போது அரச கணக்காய்வாளர் குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்ததாகவும், குறித்த அதிகாரிகள் மூவரும் தங்கள் விளக்கத்தை சமர்ப்பித்த பிறகு நடத்தப்பட்ட விசாரணையின் போது, அவர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டதாக பல்கலைக்கழக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்