கொட்டிக்காவத்த – முல்லேரியா பிரதேச சபைத் தவிசாளர் மரணம்

🕔 September 29, 2021

கொட்டிக்காவத்த – முல்லேரியா பிரதேச சபையின் தவிசாளர் ரங்கஜீவ ஜயசிங்க, கொவிட் தொற்று மற்றும் உடல்நலன் இன்மை காரணமாக காலமானார்.

ரங்கஜீவ ஜெயசிங்க நேற்று (28) காலமானபோது அவருக்கு 45 வயது.

அவர் ஆரம்பத்தில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில், தேசிய தொற்று நோய்களுக்கான நிறுவனத்தில் (ஐடிஎச்) சிகிச்சை பெற்றார். பின்னர் குணமடைந்த நிலையில் வீடு திரும்பினார்.

எனினும், கொரோனாவால் ஏற்பட்ட வேறு சில நோய்களால் பாதிக்கப்பட்ட அவர், மீண்டும் கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையிலேயே கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று (28) உயிரிழந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்