மோட்டார் வாகன மூன்றாந் தரப்பு காப்புறுதித் தொகை அதிகரிப்பு: காரணம் இதுதான்

🕔 September 21, 2021

மோட்டார் வாகன மூன்றாம் தரப்பு காப்புறுதியிலிருந்து வீதிப் பாதுகாப்பு நிதியத்துக்காக அறவிடப்படும் 01 வீத வரி, 02 வீதமாக அதிகரிக்கப்படவுள்ளது.

இம்மாதம் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வரி அதிகரிப்பு ஒக்டோபர் 01ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும்.

போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் கீழ் செயல்படும் – வீதி பாதுகாப்பு தேசிய பேரவையின் கீழ், வீதிப் பாதுகாப்பு நிதி நிறுவப்பட்டுள்ளது.

தற்போது அறவிடப்படும் 1% வரியை, வீதிப் பாதுகாப்பு நிதிக்கு மோட்டார் வாகன காப்புறுதி நிறுவனங்கள் மாதந்தம் வைப்புச் செய்யும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்