கொவிட் தொற்றுள்ளவர்கள் இந்த மருந்தைப் பயன்படுத்த வேண்டாம்

🕔 September 2, 2021

கொவிட் தொற்றுக்கு இலக்கானவர்கள் ‘ஐவர்மெக்டின்’ மருந்து பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என மக்களுக்கு அவசர அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொவிட் வைரஸுக்கு ‘ஐவர்மெக்டின்’ பலனளிக்க கூடியது என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இதனால் அந்த மருந்து பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். கொவிட்டை கட்டுப்படுத்துவதற்கும், தடுப்பதற்கும் சிலர் ‘ஐவர்மெக்டின்’னை பரிந்துரை செய்கின்றனர். உள்நாட்டில் இந்த மருந்து குறித்து ஆராய்ந்து வருகின்றோம்.

ஆனால் இன்னமும் நாங்கள் இந்த மருந்தினை பரிந்துரைக்கவில்லை. ‘ஐவர்மெக்டின்’ என்பது ஒட்டுண்ணி நோய் தொற்றுகளுக்கு சிசிச்சையளிக்கின்ற மருந்து” என நிபுணர்கள் தெரிவித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்