அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்
கொவிட் தொற்று காரணமாக நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில், அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அரச துறையில் பணியாற்றும் ஊழியர்களிகளின் சம்பளத்தை குறைக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.
இந்த சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும; “அரச மற்றும் தனியார் துறை ஊழியரகளின் சம்பளத்தை குறைப்பதற்கோ அல்லது அதற்கான நிதியம் ஒன்றை உருவாக்குவது தொடர்பிலோ, எந்த ஏற்பாடும் இல்லை. இது தொடர்பாக மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களில் எதுவித உண்மையும் இல்லை” என்றார்.