நாடாளுமன்ற உறுப்பினர்களில் கணிசமானோர் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லை: எத்தனை பேர் என்பதும் அம்பலம்

🕔 August 17, 2021

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரில் 146 பேர் மாத்திரமே ஓகஸ்ட் 12ஆம் திகதிய நிலவரப்படி தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என தகவல் அறியும் உரிமையின் அடிப்படையில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு வழங்கப்பட்ட பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி 16 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தடுப்பூசி திட்டமானது ஆரம்பிக்கப்பட்டது. எனினும் இப்போது வரை 146 நாடாளுமன்ற உறுப்பினர்களே தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 122 உறுப்பினர்கள் இந்திய அஸ்ட்ரா செனெகா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் நாரஹேன்பிட்டி ராணுவ வைத்தியசாலையில் பெற்றுள்ளனர்.

இதேவேளை 24 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்புட்னிக் – வி தடுப்பூசியின் இரு டோஸ்களையும் – நாடாளுமன்ற சுகாதார மையத்தின் ஊடாகப் பெற்றுள்ளனர்.

“எங்களிடம் இதுவரை தடுப்பூசி போடாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய விவரங்கள் மற்றும் அதற்கான காரணம் இல்லை” என, தகவல் அதிகாரியும் நாடாளுமன்ற உதவி பொதுச்செயலாளருமான டிக்கிரி கே. ஜெயதிலக தெரிவித்துள்ளார்.

இதேவேளை மொடெனா, பைஸர், சினோபார்ம் மற்றும் ஜப்பானின் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் தகவல்கள் ஏதும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்பான செய்தி: நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்: கொரோனா தொற்றுக்கு ஆளானார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்