தென்னாபிரிக்காவில் வன்முறை: 72 பேர் பலி

🕔 July 14, 2021

தென்னாபிரிக்காவில் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்று வரும் வன்முறைப் போராட்டங்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 72ஆக உயர்ந்துள்ளது.

சொவேட்டோ நகரில் கடைகள் சூறையப்பட்டபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். டர்பன் நகரில் ஒரு கட்டடத்தின் மாடியில் இருந்து குழந்தை ஒன்று தரைத் தளத்துக்கு தூக்கி வீசப்படும் காட்சி படம் பிடிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் முக்கிய பகுதிகளில் வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்காக ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. வன்முறையைத் தூண்டியதாக 12 பேரை அடையாளம் கண்டிருப்பதாக தென்னாப்பிரிக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுவரை 1,234 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் தரப்பினர் கூறியுள்ளனர்.

1990-களுக்குப் பிறகு தென்னாபிரிக்காவில் நடக்கும் மிக மோசமான வன்முறை இதுவென ஜனாதிபதி சிரில் ராமஃபோஸா கூறியுள்ளார்.

ஊழல் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா, விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகததால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு 15 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்