புர்கா உள்ளிட்ட முக மறைப்புக்களைத் தடை செய்ய அமைச்சரவை அனுமதி: சரத் வீரசேகர தெரிவிப்பு

🕔 April 27, 2021

புர்கா உட்பட பாதுகாப்புக்கு அச்சறுத்தலை ஏற்படுத்தும் முக மறைப்புக்களை தடை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

எவ்வாறாயினும்ட சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவான முகக்கவசங்களை அணிய முடியும்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

முகத்தின் சில பாகங்களை மறைக்கும் வகையிலான முகமறைப்புகளை பயன்படுத்துவதற்கு, சுகாதார அமைச்சின் தனிமைப்படுத்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவான செயற்பாடுகள் தவிர்ந்த, பொது இடங்களில் முகத்தை முழுமையாக மறைப்பதற்கு தடை விதித்து, இந்தப் புதிய சட்டமூலத்திற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

“அடிப்படைவாதம் போன்றவை இருக்கின்ற சந்தர்ப்பத்தில், உண்மையில், இது தேசிய பாதுகாப்புக்கு மிகக் கடுமையாக தாக்கம் செலுத்தும் விடயமாகும்.

எனவே, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொதுமக்களின் அடையாளத்தை பரிசோதிக்கும் நிலைமை இருக்க வேண்டும்” எனவும் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

புர்காவை உள்ளிட்ட முகம் மறைப்பான்களை தடை செய்யும் அமைச்சரவைப் பத்திரத்தை தடைசெய்வதற்கான அமைச்சரவைப் பத்திரத்தில் தான் கையெழுத்திட்டுள்ளதாக கடந்த மார்ச் 13ஆம் திகதியன்று அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்