பாம் எண்ணெய் இறக்குமதிக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை: ஜனாதிபதி தீர்மானம்

🕔 April 5, 2021

பாம் எண்ணை வகைகளை நாட்டுக்குள் இறக்குமதி செய்வதை உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்துக்கு ஜனாதிபதியின் செயலாளர் இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை பாம் எண்ணெய் தயாரிக்கப் பயன்படும் முள்ளுத் தேங்காய் உற்பத்திக்கும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையிலான தடை விதிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்