முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 08 பேருக்கு விளக்க மறியல்

🕔 March 17, 2021

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 08 பேரை விளக்க மறியலில் வைக்குமாறு ட்ரயல் அட் பார் உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கின் அடிப்படையில், இவர்களை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் இந்த மோசடி இடம்பெற்றது.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் சட்ட மா அதிபர் தாக்கல் செய்த வழக்கு, இன்று டயர் அட் பார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே, இந்த வழக்கின் சந்தேக நபர்களான ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 08 பேரை, எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

மத்திய வங்கியின் பிணைமுறியில் நடந்த இரண்டு மோசடிகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக கடந்த பெப்ரவரி மாதம், இரண்டு டரயல் அட் பார் நியமிக்கப்பட்டன.

சட்ட மா அதிபரின் கோரிக்கைக்கு இணங்க, பிரதம நீதியரசர் மேற்படி டரயல் அட் பார் இரண்டினையும் நியமித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்