06 ஆயிரம் வாள்கள் இறக்குமதி செய்யப்பட்ட விவகாரம்; மெல்கம் ரஞ்சித் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுக்க தீர்மானம்

🕔 February 18, 2021

ஸ்டர் தின தாக்குதல் காலத்தில் வாள்கள் இறக்குமதி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் பேராயர் மெல்கம் ரஞ்சித், தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் மார்ச் 05 ஆம் திகதி விசாரணைக்கு எடுப்பதற்கு நடத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

ஈஸ்டர் தின தாக்குதல் காலத்தில்,குழு ஒன்றினால் சுமார் 06 ஆயிரம் வாள்கள் இறக்குமதி செய்யப்பட்ட விடயம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிபேராயர் மெல்கம் ரஞ்சித் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்தநிலையில் மனுவின் பிரதிவாதிகளான பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்மரட்ன மற்றும் பாதுகாப்பு படையதிகாரிகள் ஆகியோருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம்அறிவித்தல்களை விடுத்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்