முதலாவது பெண் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நியமனத்தை ரத்துச் செய்யக் கோரி, அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

🕔 February 16, 2021

லங்கையின் முதலாவது பெண் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிம்ஷானி ஜசிங்காராச்சியின் நியமனம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோரி, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர உள்ளிட்ட 32 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழு – இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிம்சானி ஜசிங்காராச்சியின் நியமனம் – சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கான ஆட்சேர்ப்பு பணிக்கு முரணானது என்று மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.

பெண் ஒருவர் இலங்கையில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவியை வகிக்க முடியாது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று செவ்வாய்கிழமை உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்