விளக்க மறியலின் போது, கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஷானி அபேசேகர, ஐடிஎச் வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பு

🕔 November 27, 2020

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட குற்றப்பு லனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர சிகிச்சைக்காக ஐடிஎச் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

முன்னாள் ராஜாங்க அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்கவுடன் ஷான அபேசேகர தொலைபேசியில் தொலைபேசியில் நடத்டதியதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய உரையாடல் ஒன்று அம்பலமானதை அடுத்து, இவ்வருடம் ஜனவரி மாதம், பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த ஜுலை மாதம் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட இவர், விளக்க மறியலில் வைக்கப்பட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்