தேர்தல் ஆணைக்குழுவுக்கு தலைவர் மற்றும் அங்கத்தவர்களை ஜனாதிபதி பரிந்துரைப்பு

🕔 November 15, 2020

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு நிமல் புஞ்சிஹேவா, ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என சண்டே டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

அந்த ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் பதவிக்கு ஓய்வுபெற்ற முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் , ஜீவன் தியாகராஜா, எஸ். சமாதிவாகர மற்றும் ஓய்வுபெற்ற பிரதி பொலிஸ்மா அதிபர் கே.பி.பி. பத்திரண ஆகியோரையும் ஜனாதிபதி பரிந்துள்ளதாகவும் அந்த அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிமல் புஞ்சிஹேவா தற்போது தேர்தல் ஆணைக்குழுவில் சட்டம் மற்றும் விசாரணைப்பிரிவின் மேலதிக ஆணையாளராக செயலாற்றிவருகின்றார்.

முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் எம். எம். மொஹமட் கடந்த தேர்தல்களின் போதும் தேர்தல் ஆணைக்குழுவின் ஆலோசகராக சேவையாற்றியிருந்தார்.

ஜீவன் தியாகராஜா  1984ம் ஆண்டு தொடக்கம் அரச சார்பற்ற அமைப்புக்களில் பணியாற்றி வருவதுடன்,  அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் திகழ்கின்றார்.

அரசியலமைப்பின் 19வது திருத்தத்தில் தேர்தல் ஆணைக்குழுவில் தலைவர் உட்பட மூன்று அங்கத்தவர்கள் இருக்க முடியும். ஆனால் 20வது திருத்தத்தில்  தேர்தல் ஆணைக்குழுவில் தலைவர் உட்பட மொத்தமாக ஐந்து அங்கத்தவர்கள் இருக்கமுடியும். 

20வது திருத்தத்தின் படி தேர்தல் ஆணைக்குழுவுக்கு தலைவர் உட்பட ஐவர் அங்கத்தவர்களாக நியமிக்கப்படவேண்டும். இதில் ஒருவர் கட்டாயமாக தேர்தல் ஆணைக்குழுவில் ஆகக்குறைந்தது பிரதி ஆணையாளர் பதவியில் இருந்தவராக இருக்க வேண்டும். 

19வது திருத்தத்தின் பின்னர் மீள் வடிவமைக்கப்பட்ட தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு 2015ம் ஆண்டு நொவம்பர் மாதம் 13ம் திகதி நியமிக்கப்பட்ட   தலைவர்  மஹிந்த தேசப்பிரிய அங்கத்தவர்கள் ரட்ணஜீவன் ஹுல், என், ஜே. அபேசேகர ஆகியோரது ஐந்தாண்டுகளுக்கான பதவிக்காலம் 2020 நொவம்பர் 12ம் திகதியோடு முடிவிற்கு வரவேண்டும் என்றாலும் இன்னமும் புதிய தேர்தல் ஆணைக்குழுவுக்கான அங்கத்தவர்கள் நியமிக்கப்படாமையால் குழப்பநிலை உள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்