அரசியலமைப்பில் 20ஆவது திருத்தம் மூலம், 13ஆவது திருத்தத்தில் மாற்றம் மேற்கொள்ளப்படுமா; நீதியமைச்சர் அலி சப்ரி கருத்து

🕔 August 29, 2020

ரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் மூலம் துணைப் பிரதமர் பதவியை ஏற்படுத்துவது தொடர்பாக அரசாங்கத்துக்குள் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

மல்வத்து மற்றும் அஸ்கிரிய தேரர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை மாற்றுவது குறித்தும் அமைச்சர்கள் கவனம் செலுத்தவில்லை என கூறினார்.

புதிய அரசியலமைப்புக்கான பேச்சுவார்த்தைகளின் போது மாற்றங்களை பரிசீலிக்க அரசாங்கம் தயாராக உள்ளது என்றும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

மேலும் குறித்த சந்திப்பின்போது போதைப்பொருள் அச்சுறுத்தல் நாட்டை மீட்பது மற்றும் வருங்கால சந்ததியினர் மீதான துஷ்பிரயோகம் மற்றும் சிறுவயது திருமணங்களிலிருந்து பாதுகாப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்