அட்டாளைச்சேனையில் தேர்தல் வன்முறை; நஜாத் என்பவர் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி
🕔 August 5, 2020
– முன்ஸிப் –
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் தேர்தல் வன்முறைச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கே.எல். நஜாத் என்பவர் மீது – வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளர்கள் இந்த வன்முறைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளானவர் தற்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அட்டாளைச்சேனை – மீனோடைக்கட்டு வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்து விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த தன் மீது, கார் ஒன்றில் வந்தவர்கள், கடுமையாகத் தாக்குதல் நடத்திவிட்டுச் சென்றதாக, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கே.எல். நஜாத் – ‘புதிது’ செய்தித்தளத்திடம் கூறினார்.
தாக்குதலுக்குள்ளானவரிடம் வைத்தியசாலையில் வைத்து அக்கரைப்பற்று பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
தன்னை தாக்கியவர்களின் பெயர்கள் மற்றும் அவர்கள் பயணித்த வாகனத்தின் விவரம் ஆகியவற்றினை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாகவும், தாக்குதலுக்குள்ளானவர் ‘புதிது’ செய்தித்தளத்திடம் மேலும் தெரிவித்தார்.
தாக்குதலுக்குள்ளான கே.எல். நஜாத், தொலைக்காட்சிக் கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.