கொழும்பு மத்திய தபாலகத்தின் பணிகள், ஒரு மாதத்தின் பின்னர் ஆரம்பம்

🕔 April 18, 2020

கொழும்பு மத்திய தபாலகத்தில் தேங்கிக் கிடந்த தபால்களை பரிமாற்றும் உள்ளக நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

மத்திய மற்றும் பிராந்திய தபால் பரிமாற்றல் பகுதியில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மூன்று லட்சத்திற்கும் அதிகமான கடிதங்கள் தபால் திணைக்களத்தில் குவிந்து கிடப்பதாகவும், குறைந்தபட்ச ஊழியர்களை பயன்படுத்தி, கடிதங்களை வகை பிரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றன எனவும் தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

கடிதங்கள் வகைபிரிக்கப்பட்டவுடன், சம்பந்தப்பட்ட தபால் நிலையங்களுக்கு அவை அனுப்பி வைக்கப்படவுள்ளன. மருந்துப் பொருட்களை வீடுகளுக்கு விநியோகிக்கும் செயற்பாடு வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாகவும் தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்