கொரோனா: உலகளவில் 13,069 பேர் பலி; இன்று காலை வரை, நாட்டில் யாரும் புதிதாக அடையாளம் காணப்படவில்லை

🕔 March 22, 2020

நாட்டில் 77 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக (இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11.03 மணி வரை) சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் கொரோனா தொற்றினால் இதுவரை எந்தவித மரணமும் நாட்டில் நிகழவில்லை என்பது ஆறுதலான செய்தியாகும்.

இதேவேளை, 222 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில், நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இருந்த போதும் உலகளில் கோரோனா தொற்றினால் 13,069 பேர் பலியாகியுள்ளனர்.

சர்வதேச ரீதியாக 308,463 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை 95,500 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்