வாகன சக்கரம் மாற்றுதல் மற்றும் சக்கர சீரமைப்பு நிலையம்: அமைச்சர் றிஷாட் திறந்து வைத்தார்

🕔 September 11, 2019

இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தில் ‘வாகன சக்கரம் மாற்றுதல் மற்றும் சக்கர சீரமைப்பு நிலையம்’ அமைச்சர் றிஷாட் பதியுதீனால் இன்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

கைத்தொழில் வாணிப அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழ், இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனம் செயற்பட்டு வருகிறது.

புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மேற்படி வாகன சக்கரம் மாற்றுதல் மற்றும் சக்கர சீரமைப்பு நிலையத்தினையே அமைச்சர் இன்று திறந்து வைத்தார்.

நிறுவனத்தின் தலைவர் ஹுசைன் பைலா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் புத்திக பத்திரன, நிறுவனத்தின் பணிப்பாளர் ரியாஸ் சாலி உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்